பாலியல் புகாரால் 95 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த இளைஞர் - குழந்தை பிறந்த பிறகு பொய் புகார் என வெளிவந்த உண்மை

பொய்யாக பாலியல் புகார் கொடுத்த பெண்ணை கண்டித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகாரால் 95 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த இளைஞர் - குழந்தை பிறந்த பிறகு பொய் புகார் என வெளிவந்த உண்மை
x
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி பகுதியை சேர்ந்த இளைஞர் சந்தோஷ், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வந்தார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண் திடீரென கருவுற்றதாக கூறப்பட்ட நிலையில், சந்தோஷ் தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அத்துமீறிவிட்டு சந்தோஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பபதாகவும் கூறப்பட்டது. இதனை போலீசார் விசாரித்த போது சந்தோஷ், இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்