ஓடையில் குளிக்க சென்ற சென்ற போது காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது - மூவரின் உடல்களும் மீட்பு

ஓடையில் குளிக்க சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஓடையில் குளிக்க சென்ற சென்ற போது காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது - மூவரின் உடல்களும் மீட்பு
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் அத்திதுண்டு என்ற இடத்தில், பேமலையான் கோவில் அருகே, கோபி, பால்பாண்டி, முத்துக் கருப்பன் ஆகிய மூவர் நேற்று குளிக்கச் சென்றனர். அப்போது, ஓடை நீரில் காட்டாற்று வெள்ளத்தால் மூவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். உடன் குளிக்கச் சென்ற சிலர் காப்பாற்ற முயன்றும் அது தோல்வியை தழுவியது. இதனால், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரையும் தேடும் பணி, இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. முதலில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இறுதியாக மற்றொரு இளைஞரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்