"சகோதரியை கொடுமைப்படுத்தியதால் 3 பேரை சுட்டுக் கொன்றேன்" - விசாரணையில் ஜெயமாலா சகோதரர் ஒப்புதல் என தகவல்

சகோதரியை கொடுமைப்படுத்தியதால் மூவரையும் சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்டுள்ள ஜெயமாலாவின் சகோதரர் ஓப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல வெளியாகி உள்ளது.
சகோதரியை கொடுமைப்படுத்தியதால் 3 பேரை சுட்டுக் கொன்றேன் - விசாரணையில் ஜெயமாலா சகோதரர் ஒப்புதல் என தகவல்
x
சென்னை யானைக் கவுனியில் 3 பேர் சுட்டுக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 குற்றவாளிகளை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 
அவர்கள் மூவரிடமும் போலீசார்  நேற்று விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் நாள் விசாரணையில், ஷீத்தலின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும், தனது சகோதரி  ஜெயமாலாவை,  கொடுமைப் படுத்தியதாகவும்,  அந்த ஆத்திரத்தில் தான் 3 பேரை சுட்டுக் கொன்றதாகவும் ஜெயமாலாவின் சகோதரர் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் இருந்து காரும் துப்பாக்கியும் பெற்றதாக 3 பேரும் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸ் காவலில் எடுத்துள்ள 3 பேரையும், 
சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட   வீட்டிற்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தவும் யானைக் கவுனி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்