3 மற்றும் 15 வயது சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை - பேய் விரட்டுவதற்காக தாய் அழைத்துச் சென்ற போது நடந்த கொடூரம்

ராசிபுரம் அருகே பேய் விரட்டுவதாக கூறி ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுமிகளிடம் அத்துமீறிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
3 மற்றும் 15 வயது சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை - பேய் விரட்டுவதற்காக தாய் அழைத்துச் சென்ற போது நடந்த கொடூரம்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பறவைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். விவசாய கூலித் தொழிலாளிகளான பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் ஊரடங்கால் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். 

13 மற்றும் 15 வயதான மகள்கள் 2 பேரும் பெற்றோருடன் சேலம் அருகே வேலை பார்க்கும் இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது நிலத்தின் உரிமையாளரான 50 வயதான நபர், சிறுமிகள் 2 பேரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் 2 பேரும் பிரமை பிடித்தது போல இருக்கவே, பயந்து போனார் தாய். 

பேய் பிடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் இருந்த அந்த தாய், மகள்களிடம் எதுவும் கேட்காமலேயே மங்களபுரம் பகுதியில் உள்ள மந்திரவாதி சேகரிடம் தன் மகள்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது என கூறி நம்ப வைத்த மந்திரவாதி சேகர், தோஷம் கழிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 

பின்னர் சிறுமிகள் 2 பேரையும் தனியே அழைத்துச் சென்று அத்துமீறியிருக்கிறார். ஒரு வாரம் அவர்களை அங்கேயே தங்க வைத்தால் தான் தோஷம் கழிக்க முடியும் கூறிய மந்திரவாதியின் பேச்சை நம்பி சிறுமிகளை அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார் தாய். 

ஒரு வாரமாக சிறுமிகளிடம் மந்திரவாதி அத்துமீறலை துணிச்சலுடன் தொடர்ந்துள்ளார். ​நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் அவர். கடைசியில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிறுமிகள் பெற்றோரிடம் சொல்லவே, மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மந்திரவாதி சேகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சிறுமிகள் 2 பேரும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகள் அளிக்கும் தகவலின் பேரில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடரலாம் என கூறப்படுகிறது. 

அதேநேரம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களின் 17 வயதான மூத்த மகளை மந்திரவாதியின் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அறியாமையும் மூடநம்பிக்கையும் இன்று சிறுமிகளின் வாழ்க்கையை சிதைத்து போட்டிருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்