சாலை விபத்தில் உயிரிழந்த எதிர்வீட்டு இளைஞர் : சோகத்தில் 45 வயதான பெண் தற்கொலை - 2 குழந்தைகள் தவிப்பு
கோவையில் இளைஞர் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் எதிர் வீட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் 2 குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றன.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 29 வயதான மகன் துரைக்கண்ணன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞரின் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. உறவினர்கள் எல்லாம் வீடு திரும்பிய நிலையில் துரைக்கண்ணனின் எதிர்வீட்டில் வசிக்கும் 45 வயதான ஜெகஜோதி என்ற பெண், சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.
துரைக்கண்ணனை புதைத்த குழியை அவர் தோண்டி கொண்டிருக்கவே, அதை பார்த்த சிலர் துரைக்கண்ணனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஜெகஜோதியை எச்சரித்துவிட்டு மீண்டும் குழியை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன்பிறகு ஜெகஜோதி பாப்பம்பட்டியில் உள்ள தன்னுடைய பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு முன்பாக அவர் சாணிப்பவுடரை கலந்து குடித்துவிட்டு தூக்கில் தொங்கியதும் தெரியவந்தது.
ஜெகஜோதியின் இந்த செயல் பலருக்கும் சந்கேதத்தை ஏற்படுத்தவே, போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தான் திடுக்கிடும் அந்த தகவல் வெளியானது. ஜெகஜோதிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கணவரை பிரிந்து தன் குழந்தைகளுடன் வாழும் ஜெகஜோதிக்கு எதிர்வீட்டில் வசித்த துரைக்கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊரில் யாருக்கும் தெரியாமல் இவர்களின் ரகசிய உறவு தொடர்ந்த நிலையில் காதலன் மறைவை தாங்க முடியாமல் ஜெகஜோதி விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். தன் 2 பிள்ளைகளின் எதிர்காலம் கூட நினைவுக்கு வராத அளவிற்கு காதல் சோகத்தில் மூழ்கியிருந்த பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இருவரும் உயிருடன் இருந்த போது யாருக்கும் தெரியாத இந்த தகவல்கள் எல்லாம் உயிரிழந்ததற்கு பின் தெரியவரவே, இருதரப்பு உறவினர்களும் மீள முடியாத அதிர்ச்சியில் உள்ளனர்....
Next Story