கணவர், மாமனார், மாமியாரை கொலை செய்த மனைவி

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் பூனேவில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கணவர், மாமனார், மாமியாரை கொலை செய்த மனைவி
x
சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்த தலீல்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் குமார் ஆகியோர்  சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்,. அதில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா  பூனேவில் இருந்து வந்த தனது சகோதரர்கள் உள்ளிட்ட சிலருடன்  சேர்ந்து 3 பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது,. இந்த நிலையில் பூனே அருகேயுள்ள சோலாப்பூரில்  மறைந்திருந்த  ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் விஜய் உத்தம், ரவீந்திரநாத் கர் ஆகியோரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்,. பின்னர் சென்னை அழைத்துவரப்பட்ட 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,. தொடர்ந்து மூவரும் ஜார்ஜ் கோட்டை 8வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில்  ஆஜர் படுத்தப்பட்டனர்,.  அவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கபட்டனர்,. மேலும் தலைமறைவாக உள்ள ஜெயமாலா, மற்றும் மற்றொரு சகோதரர் விலாஸ் உள்ளிட்ட 3 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்