தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு வி.சி.க. எம்.பி, ரவிக்குமார் கடிதம்

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு, தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தகள் கட்சி எம்பியுமான, ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு வி.சி.க. எம்.பி, ரவிக்குமார் கடிதம்
x
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு, தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரும்,   விடுதலைச்சிறுத்தகள் கட்சி எம்பியுமான, ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் அணுசக்தித்துறைக்குக் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கவில்லை என கூறியுள்ளார்.
இதனால் அங்கு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்,
அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்