மரக்காணம் அருகே கடல் சீற்றம் - 75 வீடுகள் இடிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தினால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன
மரக்காணம் அருகே கடல் சீற்றம் - 75 வீடுகள் இடிந்து சேதம்
x
பொம்மையார்பாளையத்தில் இன்று அதிகாலை கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு, சுமார் 350 வீடுகள் உள்ளன. கடல் சீற்றம் காரணமாக அதிகாலை 20 வீடுகள் சேதம் அடைந்தன. தற்போது வரை 75 வீடுகள் கடல் அரிப்பினால் முற்றிலும் சேதமடைந்து கடலில் மூழ்கி உள்ளன. அந்த பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்