சென்னை யானைக்கவுனி பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தனிப்படை அதிரடி

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை பிடிக்கத் தனிப்படை சத்தீஸ்கர் விரைந்துள்ளது.
சென்னை யானைக்கவுனி பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தனிப்படை அதிரடி
x
சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் இறந்த சீத்தலின் மனைவி ஜெயமாலாவின் சகோதாரர் கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் ஆகியோரை புனேவில் வைத்து தனிப்படை கைது செய்தது. அவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், பல திடுக்கிடும் தகவல்களை கைலாஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயமாலாவின் சகோதரர், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் தங்கி துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் கள்ள சந்தையில் சப்தம் குறைவாக வரும் சில துப்பாக்கிகளை வாங்கி வந்து பயிற்சி மேற்கொண்டதாக கைலாஷ் போலீஸிடம் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னாள் ராணுவ அதிகாரியின் கார் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் வேறு யாருடன் கைலாசுக்கு தொடர்பு உள்ளது, கள்ளத்துப்பாக்கி சென்னையில் வாங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இவ்வழக்கில் புதிய திருப்பமாக கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரைப் பிடிக்க தனிப்படையினர் சத்தீஸ்கர் விரைந்துள்ளனர். ஜெயமாலாவின் மற்றொரு சகோதரர் விலாஸ், அவரின் கூட்டாளி  ராஜு சிண்டே உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்