மதுரை விளக்குத்தூண் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து - 2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விளக்குத்தூண் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து - 2 தீயணைப்பு வீரர்கள் பலி
x
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளி கடையில்  நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர். வீரர்கள் தீயை அணைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சிவராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி நாளில் , 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்