திருச்செந்தூரில்15ம் தேதி கந்த சஷ்டி விழா : 20ம் தேதி சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு தடை

திருச்செந்தூர் முருகன் கோயிலில், வருகிற 15ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில்15ம் தேதி கந்த சஷ்டி விழா : 20ம் தேதி சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு தடை
x
திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 15-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து, மாவட்ட ஆசிரியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டார். அதில், இந்த ஆண்டு நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் நாளொன்றுக்கு 10ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக கூறினார். ஆன்லைன் முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பேரும், நேரடியாக 5 ஆயிரம் பேரும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று, அவர் தெரிவித்தார். முக்கிய நிகழ்ச்சியாக 20-ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 21ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்