சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : ஜெயமாலாவின் சகோதரர் உட்பட 3 பேர் புனேவில் கைது

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் புனேவில் கைதான 3 பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : ஜெயமாலாவின் சகோதரர் உட்பட 3 பேர் புனேவில் கைது
x
சென்னை யானைகவுனியில் தலிசந்த் மற்றும் அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் கடந்த 11 ஆம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரின் சகோதரர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் புனே சென்றனர். இந்த நிலையில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் மற்றும் ரவீந்திர்நாத், விஜய் ஆகிய 3 பேர் புனேவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும். 


Next Story

மேலும் செய்திகள்