மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை - கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது

சென்னையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், லஞ்சம் ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது.
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை - கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் சிக்கியது
x
ஆவடி பூவிருந்தவல்லி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் குவிந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனையை  மேற்கொண்டனர். அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரமாக மேற்கொண்ட சோதனையின் போது கணக்கில் வராத ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். மேலும், அங்கு பணியிலிருக்கும் அதிகாரிகளின் வீட்டிற்கு சென்றும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளது. செயற்பொறியாளர் புருஷோத்தமன் என்பவரை தனி அறையில் வைத்து போலீசார் நீண்ட நேரம் விசாரணை செய்து உள்ளனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு வழங்க அதிக அளவு லஞ்சம் பெறப்பட்டது தெரியவந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்