இந்தியாவில் இருந்து மஞ்சள் கடத்த முயற்சி - ஆறு பேர் கைது

இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள மஞ்சள் கட்டிகளை கடத்த முயன்ற 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து மஞ்சள் கடத்த முயற்சி - ஆறு பேர் கைது
x
இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள மஞ்சள் கட்டிகளை கடத்த முயன்ற 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - மன்னாருக்கு இடைப்பட்ட குதிரைமலை பகுதியில், இந்திய டவ் படகு மூலம் கொண்டு வரப்பட்ட மஞ்சள் கட்டிகளை, படகில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இதில், படகில் இருந்த ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான மஞ்சள் கட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்