"காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட செல்வமுருகன்: காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

நெய்வேலி காவல்நிலையத்தில் செல்வமுருகன் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட செல்வமுருகன்: காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
நெய்வேலி காவல்நிலையத்தில் செல்வமுருகன் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய், இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்றும், இத்தகைய நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும், ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்