வங்கிக்கு வரும் பெண்களிடம் அத்துமீறல் - வங்கி காசாளரை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வங்கிக்கு வரும் பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு தவறாக படம்பிடித்து வைத்திருந்த வங்கி காசாளரை போலீசார் கைது செய்து ஹார்ட் டிஸ்க் சிடி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
வங்கிக்கு வரும் பெண்களிடம் அத்துமீறல் - வங்கி காசாளரை கைது செய்த போலீஸ்
x
விராலிமலையில் உள்ள வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் எட்வின் ஜெயக்குமார் என்பவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தட்சர் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் நடந்த சிறிது நாளிலேயே எட்வின் இல்லற வாழ்வை துறந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஒருநாள் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை பார்த்த அவரது மனைவி தட்சர் அதில் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் அளித்த புகாரை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 7 மாதத்திற்கு பின் செப்டம்பர் மாதத்தில் எட்வின் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்த போலீசார், ஹார்ட் டிஸ்க், 63 சி.டி.க்கள், 5 பென்ட்ரைவ்,  6 செல்போன்,  9 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்