"100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
x
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகானந்தம்  என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, அதிகாரிகள் நிதி முறைகேட்டிலும், பயனாளிகள் வேலை செய்யாமலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தனர்.
இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிய வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.ஒவ்வொரு பகுதியின் நலனுக்காக செய்யப்படும் பணிகளில் அப்பகுதி மக்களும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டாலும் அதில் பல மோசடிகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்