வரதமாநதி அணையிலிருந்து பாசன நீர் திறப்பு - முதல்வர் உத்தரவு
பழனியில் வரதமாநதி அணையிலிருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பழனியில் வரதமாநதி அணையிலிருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, பாசன வசதிக்காக அணையில் இருந்து தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் மார்ச் மாதம் வரை 120 நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதன் மூலம் ஐயாயிரத்து 543 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story