மெய்நிகர் அச்சு கட்டண (VPF) விவகாரம் - இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை
விபிஎப் எனப்படும் திரைப்படங்களுக்கான மெய்நிகர் அச்சு கட்டண விவகாரம் தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தமிழக அரசு வரும் 10ஆம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே விபிஎஃப் கட்டணப் பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இன்றைய தினம் மாலை 5 மணிக்கு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் புரோஜெக்ஷன் நிறுவனங்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே வரும் 10ஆம் தேதி புதிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
Next Story