ஓட்டல் உரிமையாளரின் காரை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் பிரபல ஓட்டல் உரிமையாளரின் காரை உடைத்து 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது
ஓட்டல் உரிமையாளரின் காரை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  போலீசார் விசாரணை
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபல ஓட்டல்  உரிமையாளர் கார்த்திக், என்பவரின் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்த அதில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்,. வாகனத்தை உடைத்ததும் காரிலிருந்த அலாரம் ஒலி எழும்பி உள்ளது. இதை கேட்ட ஓட்டல் உரிமையாளர் கார்த்தி வெளியே ஓடி வந்துள்ளார்.  ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் பணத்துடன் மாயமாகியுள்ளனர்,.  இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும்  ஓட்டலில் வாசலில் நடந்த  இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.


Next Story

மேலும் செய்திகள்