தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரம் - தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு வக்பு வாரிய விவகாரத்தில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரம் - தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
x
தமிழ்நாடு வக்பு வாரிய விவகாரத்தில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானது. வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறி, வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு கடந்த 2019 செப்டம்பர் 18-ஆம் தேதி  உத்தரவிட்டது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனுவையும்  உச்சநீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்