சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள் ளஅறிக்கையில், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற ஐந்தாம் தேதி முதல், அடுத்த மாதம் 22 ஆம் தேதி வரை, 48 நாட்களுக்கு பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம்,  இராஜபாளையம் வட்டத்தில் உள்ள மூன்றாயிரத்து 130 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்