நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

சேலத்தில், நகைக்கடையின் பூட்டை உடைத்து, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
x
சித்தனூர் பகுதியில் நகைக்கடை வைத்துள்ள ராஜா என்பவர், காலையில் வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளன. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்குவந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும், இங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், மூகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்