"ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் வழங்க வேண்டும்" - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் வழங்க வேண்டும் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்கவும், விவசாயம் செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கவும் மாவட்ட வருவாய்த் துறையை விவசாயிகள் வலியுறுத்தினர்.   


Next Story

மேலும் செய்திகள்