"நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்" - காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு சார்பில்  3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எனவே, மாவட்டம் முழுவதும் தேவையான இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரியும், விவசாயிகளிடம்  கட்டாயப்படுத்தி  முட்டைக்கு 40 முதல் 70 ரூபாய் வரை வசூல் செய்ததைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்