கள்ளச்சந்தையில் வெங்காயம், உருளை விற்பனை என புகார் - விற்பனையை தடுக்க காங்கிரஸ் கோரிக்கை

கள்ளச்சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம்சாட்டி உள்ளார்.
கள்ளச்சந்தையில் வெங்காயம், உருளை விற்பனை என புகார் - விற்பனையை தடுக்க காங்கிரஸ் கோரிக்கை
x
கள்ளச்சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உருளைக்கிழங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறினார். உருளைக்கிழங்கு 147 சதவீத விலை உயர்வுடனும், வெங்காயம் 142 சதவீத விலை உயர்வுடனும் விற்கப்படுவதாக கூறிய அவர், கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெறுவதை தடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்