"மருதுபாண்டியரின் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மருதுபாண்டியரின் வீரத்தை வணங்கி போற்றுகிறேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம்  இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசத்தின் அனைத்து குழுக்களையும் ஒன்றாக இணைக்க முயற்சித்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடைசிவரை போராடியவர்கள், மருதுபாண்டியர்கள் என தெரிவித்துள்ளார். தங்கள் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ் மகன்களான பெரிய மருது, சின்ன மருது எனும் மருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்களின் வீரத்தை வணங்கி போற்றுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்