நாளை ஆயுத பூஜை - கோயம்பேட்டில் குவிந்த வியாபாரிகள்...

நாளை ஆயுத பூஜையை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில், பண்டிகை கால பொருட்களை வாங்க ஏராளமான வியாபாரிகள், குவிந்துள்ளனர்.
நாளை ஆயுத பூஜை - கோயம்பேட்டில் குவிந்த வியாபாரிகள்...
x
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு  கோயம்பேட்டில், மொத்த விற்பனை காய்கறி கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 
நாளைய தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால் காய்கறிகள் , வாழை , பூசணி , தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்று விற்பனை செய்ய சில்லறை வியாபாரிகள் குவிந்தனர். அதிகளவு கூட்டம் கூடுவதால், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ தீவிரப்படுத்தி உள்ளது. கிருமி நாசினி தெளித்தல், வியாபாரிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை விற்பனை மறுக்கப்பட்டுள்ள நிலையில், தியாகராயநகர் , பிராட்வே , மயிலாப்பூர் , புரசைவாக்கம் , திருவல்லிக்கேணி  உள்ளிட்ட பல பகுதிகளில் வியாபாரிகள் தற்காலிக பண்டிகை கால விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்