முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் ஸ்டாலின் - முதல்வரின் தாயார் மறைவுக்கு ஆறுதல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 13ஆம் தேதி அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். சொந்த ஊரில் இறுதி சடங்கு காரிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், அவற்றை முடித்துவிட்டு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்  முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள்  உருவப்படம் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அங்கு தவுசாயி அம்மாளின் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்