குடும்ப தகராறில் துப்பாக்கிச் சூடு - குண்டு காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில், குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரத்தை சேர்ந்த இப்ராகிம் என்பவருக்கும் அவரது மனைவி நிஷாவுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகவே சண்டை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும், ஒரே வீட்டில் தனித்தனியாக சமைத்து உண்டு வந்துள்ளனர். இந்நிலையில், நிஷாவிற்கு அவரது அக்கா மகன் அன்சாரூதின் உதவியாக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இப்ராகிம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, துப்பாக்கியால் அன்சாரூதினின் கையில் இப்ராகிம் சுட்டுள்ளார். இதை தொடர்ந்து தனது கையிலும் இப்ராகிம் சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குண்டு காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story