தடுப்பணையில் குளிக்க சென்றவர் மாயம் - இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று இரவு 7 மணிக்கு மருதங்கோடு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பெயின்டிங் தொழில் செய்யும் நபர் அவரது நண்பர்களுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க வந்துள்ளார்.
தடுப்பணையில் குளிக்க சென்றவர் மாயம் - இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்
x
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று இரவு 7 மணிக்கு மருதங்கோடு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பெயின்டிங் தொழில் செய்யும் நபர் அவரது நண்பர்களுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். ஊர்மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் மாயமான நபரை கரையோரமாக தேடினர்.குழித்துறை தீயணப்பு துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்