தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு - தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

வாகனங்களுக்கான தகுதி சான்று புதுப்பிக்கும் போது, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்டவற்றை ஓசூரை சேர்ந்த 3M இண்டியா பி லிமிடெட், மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் பி லிமிடெட் நிறுவனங்களிடம் பெற்று அதற்கான சான்றுகளையும் அந்நிறுவனத்திடம் பெற வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு - தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
x
வாகனங்களுக்கான தகுதி சான்று புதுப்பிக்கும் போது, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்டவற்றை ஓசூரை சேர்ந்த  3M இண்டியா பி லிமிடெட், மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் பி லிமிடெட் நிறுவனங்களிடம் பெற்று அதற்கான சான்றுகளையும் அந்நிறுவனத்திடம் பெற வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது என கூறி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு,  வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையர் நவம்பர் 26 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்