டொங்கா கால்வாய் ஆற்றுக்குள் விழுந்த கார் -வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய மெய்சிலிர்க்கும் காட்சி

திருப்பதி செல்லும் வழியில், ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார்.
டொங்கா கால்வாய் ஆற்றுக்குள் விழுந்த கார் -வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய மெய்சிலிர்க்கும் காட்சி
x
திருப்பதி செல்லும் வழியில், ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மூவர் மீட்கப்பட்டனர். விசாகப்பட்டினம் மாவட்டம் நார்சிபட்டினம் பகுதியில் டொங்கா கட்டா கால்வாய் மீது சென்றுகொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்தது. அதிகாலையில், கார் கவிழ்ந்த நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து வெளியேறிய தீபக் என்பவரது தாயார், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். மரத்தை பிடித்த நிலையில், உயிருக்கு போராடிய தீபக், அவரது மனைவி இருவரையும், உள்ளூர் வாசிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். காரின் ஓட்டுனரும் மீட்கப்பட்டார். வெள்ளம் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், மூவரும் மீட்கப்பட்ட திகிலூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்