நடப்பது என்ன என தெரியாத சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: 7 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் - தாயின் நடவடிக்கையால் பறிபோன சிறுமியின் வாழ்க்கை

ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடப்பது என்ன என தெரியாத சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: 7 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் - தாயின் நடவடிக்கையால் பறிபோன சிறுமியின் வாழ்க்கை
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 12 மற்றும் 13 வயதில் 2 பிள்ளைகள். 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர், சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் தன் பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணிற்கு ஊரில் ஆண் நண்பர்களும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களின் வீட்டுக்கு ஆண்கள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது. 

அப்படி வந்து போன சிலரின் கண்கள் சிறுமிகள் 2 பேர் மீதும் விழுந்திருக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஆலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் அந்த பெண். கொரோனா விடுமுறையால் சிறுமிகள் 2 பேரும் வீட்டில் இருந்த நிலையில் அங்கு வந்த ஆண்கள் சிலர் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் நடப்பது என்னவென்றே தெரியாத சிறுமிகள் இதை தாயிடம் சொன்னபோதும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 
சிறுமிகளுக்கு பிடித்த இனிப்புகளும் சாக்லேட்டுகளும் வாங்கிக் கொடுத்த சிலர் அவர்களிடம் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளனர். 

சம்பவத்தன்று 75 வயதான ஊமையன் என்ற முதியவர் ஒருவர் இவர்களின் வீட்டில் இருந்து ஆடைகளின்றி நிர்வாணமாக ஓடுவதை அக்கம் பக்கத்தினர் பார்க்கவே, அவர்கள் நேராக வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்ததை கூறி கதறி அழுதனர். 

பதறிப்போன கிராம மக்கள் இந்த தகவலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கொண்டு செல்லவே, பிரச்சினை பூதாகரமாக வெளிவந்தது. விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமிகளிடம் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக இளைஞர்கள், முதியவர்கள் என பாரபட்சமின்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

தங்களுக்கு நடந்ததை சிறுமிகள் கூறியதை கேட்டு பதறிப்போன குழந்தைகள் நல அதிகாரிகள், 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையின் போது சிறுமிகள் மேலும் பலரின் பெயர்களை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

சிறுமிகள் என்றும் பார்க்காமல் ஒரு கும்பலே அவர்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவமும், இதனை தாய் கண்டும் காணாமல் விட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்