"நவ.3-ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து அடுத்த மாதம் 3ஆம் தேதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
நவ.3-ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
x
2021 மே மாதம் சட்டப் பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், அடுத்த மாதம் 3ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார். ஜனவரி மாதம் 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் ஆகிய திருத்தங்கள் செய்யலாம். 2021 ஜனவரி 1 முதல் 18 வயது நிரம்பியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்