2 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம்: 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை - "மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சி"

ராசிபுரத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம்: 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை - மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சி
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான சிறுமிகளுக்கு கடந்த 6 மாத காலமாக சிலர் பாலியல் வன்கொடுமை செய்த தகவல் வெளியானது. இதையடுத்து 75 வயது முதியவர் உட்பட 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சிறுமிகளின் தாய்க்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதேநேரம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 7 பேர் கைதாகி இருக்கும் நிலையில் மேலும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்