திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: "குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை"- மதுரை கிளையில் அரசு மேல்முறையீடு

திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
x
திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தனை  திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம்  -  கிருஷணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.   விடுதலை செய்யப்பட்ட கிருபானந்தம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்