கோவில் பூசாரிகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்க வேண்டும் - இந்து மகா சபா வலியுறுத்தல்

கோவில் பூசாரிகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்க வேண்டும் என, இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
கோவில் பூசாரிகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்க வேண்டும் - இந்து மகா சபா வலியுறுத்தல்
x
கோவில் பூசாரிகளுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்க வேண்டும் என, இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில், அகில பாரத இந்து மகாசபையின்  தஞ்சை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியம்,  கும்பகோணம் மகாமகத்தை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கோவில் பூசாரிகளுக்கு  குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் அளிக்க வேண்டும், கும்பகோணத்திலிருந்து விருத்தாசலத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில், இந்து நலனில் அக்கறை உள்ளவர்களோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்