"சிறு மொத்த கடைகளை இயக்குவதற்கு ஏற்பாடு" : அனுமதிக்காவிட்டால் சாலை மறியல் - வியாபாரிகள்
கொரோனா காரணமாக திருமழிசையில் இயங்கி வந்த தற்காலிக கோயம்பேடு சந்தையின் உணவு தானிய அங்காடி மற்றும் காய்கனி அங்காடி மேலும் கோயம்பேட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.
கொரோனா காரணமாக திருமழிசையில் இயங்கி வந்த தற்காலிக கோயம்பேடு சந்தையின் உணவு தானிய அங்காடி மற்றும் காய்கனி அங்காடி மேலும் கோயம்பேட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. சிறு மொத்த கடைகளை பொறுத்தவரை இந்த மாதம் எட்டாம் தேதி முதல் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை கடைகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என சிறு மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் இயங்கி வந்த சிறு மொத்த கடைகளை இயங்க அனுமதிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story