குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற பெற்றோர் - "அந்தரத்தில் தொங்கிய 4 வயது சிறுவன்" - காப்பாற்ற போராடிய 6 வயது சகோதரி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முகமதுஷாலிக். வீடு வீடாக சென்று பினாயில், ஆசிட், பொருட்களை விற்பனை செய்யும் இவர், கடந்த செவ்வாய்கிழமை தோப்புப்பட்டிக்கு சென்றுள்ளார்.
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற பெற்றோர் - அந்தரத்தில் தொங்கிய 4 வயது சிறுவன் - காப்பாற்ற போராடிய 6 வயது சகோதரி
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முகமதுஷாலிக். வீடு வீடாக சென்று பினாயில், ஆசிட்,  பொருட்களை விற்பனை செய்யும் இவர், கடந்த செவ்வாய்கிழமை தோப்புப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்தபடி சிறுவன் வெளியே தொங்கியதையும், அவனை தூக்க முடியாமல் அவனது சகோதரி தவித்தையும் கண்டு அதிர்ந்தார். அவரது அறிவுறுத்தல்படி, சிறுவனின் கையை சிறுமி விட்டதும், சிறுவனை கீழே விழாமல் லாவகமாக காப்பாற்றினார் முகமது ஷாலிக். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்