திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற இளம்பெண் பலி - விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தன்னுடைய திருமண நிச்சயதார்த்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார்.
திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற இளம்பெண் பலி - விபத்தில் சிக்கி உயிரிழப்பு
x
தன்னுடைய திருமண நிச்சயதார்த்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார். திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்தவர் ஜமுனா. இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதற்காக தன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார் ஜமுனா. அப்போது திடீரென இவரின் வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஜமுனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்