திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் : "63 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்" - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம்

திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் உள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அவர்களுக்காக சரித்திர பதிவேடு துவங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் : 63 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம்
x
திருச்சி மத்திய மண்டலத்தில், திருச்சி புறநகர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்த பட்டியலை ஐஜியான ஜெயராம் வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை 2 ஆயிரத்து 690 ரவுடிகளின் சரித்திர பதிவேடு ஏற்கனவே உள்ளதாகவும், கடந்த 3 மாதங்களில் புதிய ரவுடிகளாக 476 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு சரித்திர பதிவேடு துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 63 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, 9 மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்