ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர் - 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு

விருத்தாச்சலம் அருகே செம்பளக்குறிச்சி கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதை 5 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர் - 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு
x
விருத்தாச்சலம் அருகே செம்பளக்குறிச்சி கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதை 5 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாக அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் அவ்வப்போது தண்ணீர் நிரம்புவதும் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழையால் மழை நீர் நிரம்பி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல ஆண்டுகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆபத்தான சூழலில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் சென்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்