300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு - அய்யன் குளத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர் வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு - அய்யன் குளத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
x
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு செல்லும் மன்னர்கள் கால சுரங்க நீர் வழித்தடங்கள் காலப்போக்கில் மறைந்த நிலையில், தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நீர் வழிப்பாதையில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 3 சேனல்களை அய்யன் குளம் அருகில் கண்டுபிடித்து அதை  புனரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிவகங்கை குளம் வரை மீதமுள்ள மற்ற சேனல்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது அய்யன் குளத்திற்கு தண்ணீர் செல்ல தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலும் சேனல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அய்யன் குளத்தை ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்