சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் - காவலர் முருகன் 3வது முறையாக ஜாமீன் கோரி மனு
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் மூன்றாவது முறையாக காவலர் முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் தமக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும்
அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி இளதிரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்குவது குறித்து சிபிஜ பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story