"அ.தி.மு.க தொண்டர்கள் நலன் கருதி முடிவு" - துணை முதல்வர் ஓ.பி.எஸ் டுவிட்டரில் பதிவு

தமிழக மக்கள், அ.தி.மு.க தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், தற்போது தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளார்.
கடந்த 2ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அங்கு தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனிடையே, நாளை மறுநாள் அதிமுகவில், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கீதை உபதேசங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தமது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன என்றும், இனியும் அவ்வாறே இருக்கும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  நாளை மறுதினம் அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை முதல்வரின் இந்த பதிவு மேலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே இன்று மாலை ஓ.பி.எஸ். சென்னை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 


Next Story

மேலும் செய்திகள்