அம்பேத்கர் புகைப்படம் கிழிக்கப்பட்ட விவகாரம் - விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்

சென்னை மாங்காட்டில் அம்பேத்கர் புகைப்படத்தை கிழித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
x
மாங்காடு பேருந்து நிலையம் அருகே பல்வேறு கட்சி தலைவர்களின் கல்வெட்டுகளுடன் கூடிய கொடி கம்பம் உள்ளது. இங்கு, கல்வெட்டில் ஒட்டப்பட்டிருந்த அம்பேத்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரது உருவப்படங்கள் கிழிக்கப்பட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார், சமரச பேச்சு நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்