தமிழகத்தில் மேலும் 5,489 பேருக்கு தொற்று - ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரேநாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கையும் 9 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 46 ஆயிரத்து 120 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1,374 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் ஆயிரத்து 374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்