உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவம் - கனிமொழி தலைமையில் திமுக பேரணி

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, திமுக சார்பில் சென்னையில் நாளை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள ஸ்டாலின், நாளை மாலை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் இந்த பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அராஜகத்தின் ஆட்சி, சர்வாதிகாரத்தின் ஆட்சி நடக்கிறது என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன என்று கூறியுள்ள ஸ்டாலின்,

உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளை திருத்தி கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், உ.பி. அரசுக்கு, இதனை செய்ய மத்திய அரசு, உத்தரவிடவேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாம் ஏற்றும் ஒளி, தவறுகளுக்கு எதிரானதை எரிக்கட்டும் என்றும், இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்