கோயில், 3 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் உள்பட 3 வீடுகளில் கொள்ளையன் கைவரிசை காட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோயில், 3 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் உள்பட 3 வீடுகளில் கொள்ளையன் கைவரிசை காட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வைத்தியநாத சுவாமி கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு காவலாளி வரவே, அந்த கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் தப்பிச் சென்ற அவர்கள், அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக ஒரு வீட்டில் 3 செல்போன்களை அவர்கள் திருடிவிட்டு சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். அதேநேரம் கோயிலுக்குள் கொள்ளையன் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்